118 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
18. பாரதியார் நேரிசை வெண்பா *முருகா! முதல்வா! முத்தமிழில் நெஞ்சை உருகவைக்கும் மாணவர்காள்! உண்மை - மருவியநல் ஞானஞ்சேர் ஆசிரிய நல்லோரே என்கவியை நானுஞ்சொல் கின்றேன் நயந்து எண்சீர் விருத்தம் தமிழ் வாழ்த்து கவிதைஎனுங் காதலிபால் உன்னைப் பெற்றேன் கண்ணம்மா! தமிழ்மகளே! முத்த மிட்டேன் கவிவெறியோ கள்வெறியோ அறிய கில்லேன் கனவுலகில் பறக்கின்றேன் தரையில் நில்லேன்; செவிபொருந்தும் விழிகண்ணீர் சிந்தக் காணின் செங்குருதி பீறிட்டென் னெஞ்சிற் கொட்டும் புவிபுகழும் நீகலங்கப் பார்த்து நில்லேன் போர்தொடுப்பேன் உனைக்காப்பேன் வாழ்த்தி நிற்பேன் கலிவெண்பா முன்னுரை நாடி வருவோர்க்கு நற்கல்வி ஊட்டுதற்குக் கூடி வருமுணர்வால் கோவில் இடமெல்லாம்
*முருகா - கல்லூரி முதல்வர் முருகையன் |