பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 119

பள்ளித் தலமாக்கிப் பாமரர்க்கும் ஏழையர்க்கும்
அள்ளிக் கொடுக்கும் அறிவுப் பணிபுரியும்

குன்றா வளநல்கும் குன்றக் குடிமலையில்
ஒன்றும் மலைவாழை ஓங்குந் தலைவாழை

செந்தமிழே நெஞ்சிற் சிவமாக்கும் செவ்வாழை
இந்தச் சுவைவாழைக் கென்வணக்கம் கூறுகின்றேன்;

முன்னைப் பழமரங்கள் மூதறிவால் வாழ்மரங்கள்
மின்னல் இடிபுயலால் வீழாமல் நிற்குமரம்

பற்பலவாய்ச் சூழும் பழவாழைத் தோட்டத்துள்
பொற்புடனே நற்கனிகள் புக்குப் பறித்தெடுத்து

நல்கும் கவிகாள்! கனியின் நலம்துய்க்க
மல்கும் செவியுணர்வின் மாமணிகாள் என்வணக்கம்;

வாழையடி வாழை

சங்க இலக்கியங்கள் சாகாக் கனிநல்கிப்
பொங்குகின்ற வாழைமரப் பூங்கா எனவுரைத்தார்

மூவாத் தமிழ்வளர்க்கும் மு. வ. அவர்மொழியை
நாவார வாழ்த்துகிறேன்; நாடு நலங்கொழிக்க

ஆயிரம்பல் லாயிரமாய் அவ்வாழை ஒவ்வொன்றும்
ஆயினவாம்; பாரதியும் அவ்வழியில் ஓர்வாழை;

பாரதியாம் வாழை பயந்த அடிவாழை
பாரதி தாசனென்று பாருரைக்கும்; இவ்வாழை


மலைவாழை - குன்றக்குடி மலையில் வாழ்பவர்
தலைவாழை - தலைமை தாங்குபவர்
செவ்வாழை - காவி உடை அணிந்தவர்