பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 121

சென்னை நகர்க்குச் சிலர்கொண்டு சென்றார்கள்;
நன்னீரா வார்த்தார்கள்? நாளும் திருக்கூவப்

புன்னீரால் பூசை புரிந்தார்கள்; ஆனாலும்
*முன்னீர்மை போகவில்லை மும்மடங்காக் கண்டதனால்

ஆங்கிலத்தார் கண்பார்வை அவ்வாழை மேற்படலால்
தீங்குளத்தார் வஞ்சத் திருடர் அறியாமல்

பாண்டிப் பதியில் பதித்துக் கடல்நீரை
வேண்டி இறைத்திறைத்து வீரச் சுவைமாற்றக்

கூடி உழைத்தார்கள்; கூடும் புதுவையில்தான்
நாடிவரும் புத்துலக நல்லாசான் நம்ஆசான்

ஈடில் புரட்சி எழிற்கவிஞன் என்னுமொரு
பாடல் தருவாழை பாருக் களித்ததுவே;

பயனும் சுவையும்

வாழையிலை காய்கனிபூ பட்டை வளர்தண்டு
கீழே யுறுகிழங்கு கேடின்றிப் பயனுறல்போல்

பாவல்ல வாழை பயக்கின்ற அத்துணையும்
**ஓவின்றி மக்கட் குறுபயனை நல்குவதாம்;

காதற் சுவையுண்டு கல்விச் சுவையுண்டு
தீதற்ற வீரச் சுவையும் தெரிவதுண்டு

பத்திச் சுவையும் பழமை தரும்சுவையும்
மெத்தப் புதுமை விரும்பும் சுவையும்


*முன்னீர்மை - முன்னையியல்பு
**ஓவின்றி - நீங்காது