பக்கம் எண் :

122கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

புரட்சிச் சுவையும் புகுந்தபகை வர்க்கு
மருட்சிச் சுவையும் வழங்குவது நம்வாழை;

சுவைகாணார்

சாதிச் சழக்காலே சாப்பிடுவோர், மேலுலகம்
ஓதிப் பிழைப்பவர்கள், ஓரா யிரந்தெய்வம்

உண்டென் றலைந்திடுவோர், ஊரேய்த்து வாழ்ந்திடுவோர்
உண்டாற் சுவைநல்கா திவ்வாழை உண்மையிது;

அகப்பகைவர்

பாரதியின் பேர்சொல்லிப் பாங்குபெறும் நல்லன்பர்
வீரமிகு பாடல்களை வெட்டிவிட்டுக் காட்டுகின்றார்;

சூரன் முகத்திற் சுருண்டுவளர் மீசைதனில்
ஓரங் குறைத்தால் உருவமது பாரதியோ?

தாள்குறைத்து மேல்குறைத்துத் தண்டொன்றே கைப்பற்றி
ஆள்பிடித்து வாழைஎன ஆர்க்கின்றார் சூதுடையார்;

பாரதி வந்தான்

வீர உருக்குறைத்து வேடிக்கை காட்டுகின்ற
பேரின் செருக்கொழிந்து தீயாதோ? என்றேன் நான்;

‘தீயுமடா! தீயுமடா! தீப்பகைவர் தற்செருக்கு;
நீயுமெழு! நீயுமெழு! நேர்நின்று போர்தொடுப்பாய்’

என்ற வுரைகேட்டேன் ஏறனைய பாரதியும்
ஒன்றி எனதுமனத் துள்ளே நகைத்துநின்றான்;

கானத்து வாழ்புலியாய்க், கத்துபுனல் நீந்திவரும்
மீனத்தில் நற்கயலாய், மேல்நோக்கிப் பாய்கின்ற