124 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
தென்னாடென் றுரைத்தாலோ ஒன்று பட்ட தேயத்தைப் பிரிக்கின்ற உணர்ச்சி யென்பார்; எந்நாளும் தமிழரெனும் உணர்ச்சி யின்றி இருப்பவரே பாரதத்தின் புதல்வர் என்பார் உன்னாட்டில் தமிழாட்சி கொடுத்து விட்டோம் உயர்கலைகள் தமிழ்மொழியில் உண்டா? என்று தென்னாட்டை உணராதார் கேட்பர்; உண்டு; தீக்கிரையாய்ப் போனதுண்டு; நெஞ்சை யள்ளும் பொன்னேட்டைத் தின்றொழித்த நெருப்பும் சொல்லும் போகட்டும்; புதுக்கலைகள் செய்து காட்டும் முன்னேற்றம் தமிழிலுண்டு; நேற்று வந்த மொழியாளர் கேட்பதெனில் விந்தை தம்பி! மெத்தவளர் புதுக்கலைகள் தமிழிற் செய்து மேன்மைபெற வேண்டுமென்று பாடி நின்றேன்; செத்தமொழி சுமப்பதற்கு நாடு கின்றீர்! செந்தமிழை வாழ்மொழியைச் சாக டிக்கப் பித்தரெனப் பிதற்றுகின்றீர்! நன்றோ? சொல்வீர்! பிறனாட்சி தொலைந்துவிடின் தமிழின் மாட்சி எத்திசையும் பரவிவரும் என்றி ருந்தேன்; இகழ்ச்சிக்கோ போர்ப்பாட்டுப் பாடி வைத்தேன்? கலைமலிந்த தமிழ்நாட்டில் வணங்கு தற்குக் கடவுளர்தாம் ஆயிரம்பேர்; அவர்கட் கெல்லாம் பலமனைவி; இவரன்றி வேறு பக்கம் படையெடுப்பும் நடப்பதுண்டு; மக்கள் உண்டு; |