136 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
கேடு தொலைந்ததெனக் கீழ்வான் சிவந்ததென நாடு சிறந்ததென நாளும்நீ பாடடா; வானிற் பறந்துவந்து வட்டமிட்டுப் பாருலகை மேனின்று பாரடா மேன்மைஎலாம் பாடடா;80 சிம்புட் பறவைஎனச் செப்பினான் உன்முன்னோன் தெம்புளத்தே கொண்டு சிறகை விரித்தெழுவாய், வாபறந்து வானில் வலமாச் சுழன்றுதிரி நீபறந்து வந்தால் நிலமெல்லாங் கண்டிடுவாய்’; என்றமொழி கேட்டேன்நான் எப்படி வான்பறப்பேன் என்றயர்ந்தேன்; அஃதுணர்ந்த என்னன்னை மூரலித்துச் ‘செல்வ மகனே சிறகிருந்தும் நீயறியாய் சொல்வ துடையேன் சொலுமுன்னே மேலெழுவாய், உள்ளத்தே வற்றாமல் ஊறிவரும் பேருணர்ச்சி வெள்ளத்தை ஓர்பால் விரிசிறகாக் கொண்டிடுக,90 கற்ற இலக்கணத்திற் கண்ட திறமெல்லாம் மற்றோர் சிறகா மதித்துணர்ந்து கொண்டெழுக; கற்பனையாம் வானிற் கடுகிப் பறந்துவிடு, அற்புடைய பூமிக்கும் அப்பாலே வந்துவிடு, பாடும் பறவையடா பாடி மகிழ்ந்திடடா, வாடும் நிலைஎதற்கு வாவா விரைந்’தென்றாள்; கண்ணை யிமைக்குமுன் கற்பனையில் ஏறிவிட்டேன் மண்ணை மறந்தேன் மகிழ்ச்சிக்கோர் எல்லையிலை; விண்ணிற் பறந்தேன் விழையுந் திசைஎல்லாம் நண்ணித் திரிந்தேன் நற்றாய் உடன்வந்தாள்;100 ஆங்கிருந்து பார்த்தேன் அடடாஓ மண்பரப்பில் தேங்கியுள காட்சியெலாஞ் செப்புந் திறனில்லை; நெஞ்சங் குளிர்ந்து நெடுவானில் அங்குமிங்கும் விஞ்சுங் களிப்பால் விளையாடி நான்பறந்தேன்; பாடிப் பறந்தேன் பசுமை வளமெல்லாம் கூடிக் கிடக்கின்ற கோலமெலாங் கண்டுணர்ந்தேன்; |