பக்கம் எண் :

தமிழ் முழக்கம்137

காட்சிஎலாங் கண்டு களிகூர நான்பறந்தேன்;
மாட்சிமைசேர் என்னன்னை மற்றுஞ் சிலசொன்னாள்:
‘நாட்டு வளமெல்லாம் நாடிச் சிறகடித்துப்
பாட்டுப் பறவைஎனப் பண்பாடி வந்தனைநீ,110
எண்ணி லடங்கா இயற்கை வளங்களெலாம்
மண்ணில் இருந்தும் மனிதன் நிலைமட்டும்
வற்றி வறண்டு வறுமை மிகவுற்றுச்
சுற்றி யலைகின்றான் சோற்றுக் கழுகின்றான்
ஏனென் றறிந்தாயா?’ என்று வினவினள்தாய்;
நானொன் றறியேன் நவிலெனக்கு நீ யென்றேன்;
கையிருந்தும் காலிருந்தும் காடு கழனியெனச்
செய்யிருந்தும் வேலையது செய்ய மனமின்றிச்
சோம்பித் திரிகின்றான்; சோற்றுக் கவலையினால்
தேம்பித் தவிக்கின்றான்; தீங்கின்றி வாழ120
உழைப்பை மதிப்பதில்லை ஓய்ந்திருந்தே இங்குப்
பிழைக்க விழைகின்றான் பேதைமையாற் சாகின்றான்;
மண்ணிற் கிடந்து மடிகின்ற மாந்தனை நீ
நண்ணி உணர்வூட்டு, நாளும் வலிவூட்டு,
கண்ணைத் திறந்துவிடு, காலத்தை ஞாலத்தை
எண்ணித் தொழில்புரிய ஏவிவிடு, மண்ணகத்தே
வாழ்வாங்கு வாழ வழிமுறைகள் சொல்லிவிடு;
தாழ்வாகி நிற்போர் தலைநிமிரச் செய்துவிடு;
பாடும் பறவையெனப் பாடி வருபவனே
கூடும் உனக்கொன்று கூறுகிறேன் நெஞ்சிற்கொள்;130
மண்ணை விடுத்தெழுந்து மாந்தன் உடல்தவிர்த்து
வண்ணப் பருந்தேபோல் வானிற் பறந்தாலும்
செத்துக் கிடக்குஞ் சிறப்பில் இழியுணவை
நத்திப் பறந்திறங்கும் நாட்டத்தை விட்டுவிடு,
சொன்னதையே சொல்லுங் கிளிப்பிள்ளை யாகாமல்
உன்னதையே சொல்லி உயரப் பறந்துதிரி;
மாட்டின் முதுகிருந்து மாறாது கொத்திமிக