பக்கம் எண் :

தமிழ் முழக்கம்139

2. குயில்பாட்டு

கலிவெண்பா

பாரதியின் பாமலர்கள் பற்பலவாய்ப் பூத்திருக்கும்
சீருயர்ந்த பூங்காவுட் சென்று குயிற்பாட்டை
நட்ட நடுஇரவில் நான்சுவைத்தேன்; அப்பாட்டில்
தொட்டஇட மெல்லாம் சுவையேறி நின்றதம்மா!
‘முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்’
பன்னிப் படைத்தளித்த பாவளத்தை என்னென்பேன்!
காதல் வெறியேறிக் கள்மயக்கந் தானேறி
மோதித் துளைக்குமொரு மோகத் துயராலே
புத்தி தடுமாறிப் பொம்மையெனத் தான்நடந்து
நத்தி மலர்ச்சோலை நான்கு புறந்தேடிக்10
கானக் குயிலிசைத்த காதல் நெடும்பாட்டால்
மோனப் பெருவெளியில் மோகப் பெருமயக்கில்
அக்குயிலி கள்ளிதழை ஆசையொடு முத்தமிட்டுச்
சொக்கிச் சுகந்தனிலே சொல்லெல்லாஞ் சூடேற்றிப்
பாட்டை வடித்தெடுத்துப் பக்குவமாத் தேன்கலந்து
நாட்டுக் களித்தஒரு நற்பாங்கை நான் சொலவோ?
மாஞ்சோலை வான் கிளையில் வண்ணக் குயிலிருந்து
தீஞ்சுவையிற் பாடுந் திறத்தினைத்தான் செப்புவனோ?
இன்ப வெறியேறி ஏக்கம் மிகவாகித்
துன்பங் கலந்திருக்கத் தோகைக் குயில்பாடும்20
பாட்டின் இயல்பைத்தான் பாடுவனோ? அப்பாட்டைக்