3. தென்னாட்டுக் கலைகள் கலிவெண்பா சீருடைய நுண்கலைகள் சேர்ந்திலங்கும் நாடொன்றே பேருலகில் நாகரிகம் பெற்றிருக்கும் நாடென்பர்; ஆயகலை அத்தனையும் அத்தனைக்கும் நூற்பகுப்பும் தூய நெறிமுறையில் தோற்றுவித்து வாழ்ந்தவர்நாம்; நல்ல கலைவளர்த்து நாகரிக நாடென்று சொல்லும் நிலைதன்னைத் தொன்றுமுதல் பெற்றிருந்தோம்; சிற்பக்கலை கல்லெடுத்தான் கைச்சிற் றுளிஎடுத்தான் அக்கல்லில் சில்லெடுத்தான் நல்ல சிலையொன்று கண்டெடுத்தான்; கற்பனையில் கண்டெடுத்த காதற் பொருளெல்லாம் சிற்பமென ஆக்கிச் சிறப்பெடுத்தான் நம்முன்னோன்;10 கல்லைக் கலையாக்கும் கைத்திறனை நீள்கடல்மா மல்லைக் கருங்குன்றம் மாறின்றிக் கூறிநிற்கும்; தென்மதுரைக் கோவிலுக்குள் தேர்வடிவக் கல்லெல்லாம் நன்மதுர மெல்லிசையால் நாளெல்லாம் பாடிநிற்கும்; விண்ணெட்டும் கோபுரங்கள் விந்தைதரும் நற்சிலைகள் உண்ணட்ட கற்றூண்கள் ஓங்கும் மதிற்புறங்கள் ஒவ்வொன்றும் காட்டும் உயிர்ச்சிலைகள் நம்சிற்பச் செவ்விதனைக் கூறிச் சிறப்பெல்லாம் பேசிநிற்கும்; தஞ்சைப் பெருவுடையான் தங்கும் தளியதனுள் நெஞ்சைக் கவரும் நிலையில் நிமிர்ந்திருக்கும்20 |