பக்கம் எண் :

தமிழ் முழக்கம்145

வேட்டான், எடுத்தான் *வெதிரைத் துளைத்தான்
குழல்கண்டான்; வாயைக் குவித்திசையை ஊதிப்
பழகி இனிதாக்கிப் பாருக் களித்தவன்யார்?
வேட்டைக் குதவிவரும் வில்லெடுத்து நாண்தொடுத்துப்
பூட்டித் தெறித்தான் புதிய ஒலிகேட்டான்;50

விண்ண் ணெனஇசைத்த ஓசை வியப்பூட்டப்
பண்ண் ணிசைக்கும்யாழ் பண்ணி நமக்களித்தான்;
வேட்டை யளித்த விலங்கினத்தின் தோலுரித்து
மேட்டில் உயர்மரத்தில் வீசி எறிந்துவிட்டான்;
காய்ந்தெழுந்த தோலிடத்துக் காற்றால் சிறுகொம்பு
தோய்ந்துதோய்ந் தாடுவதால் தோன்றியதோர் பேரோசை
அன்றே படைத்தான் அளப்பரிய தோற்கருவி;
நன்றாம் இசைக்கருவி நாலுவகை செய்தமைத்தான்;
கூவும் குயில்கண்டான் கொக்கரித்துக் கூவிநின்றான்
யாவும் இசையாகப் பாயும் நிலையுணர்ந்தான்;60
பந்தென்றும் கும்மியென்றும் பாய்ந்தாடும் ஊசலென்றும்
வந்த விளையாட்டில் மங்கையர்கள் பாடிடுவர்;
ஏற்றம் இறைப்பார் இசைக்கின்ற பாட்டோசை;
நாற்று நடுவோர்கள் நாவசைக்கும் கூட்டோசை,
கொல்லைத் தினையிடிக்கும் கோல்வளையார் பாடுகின்ற
*வள்ளைப்பாட் டெல்லாம் வளரிசையைக் காட்டாவோ?
சீராரும் தன்மகவைச் சின்னஒரு தொட்டிலிலிட்
டாராரோ பாடுகின்ற அப்பாட்டுப் போதாதோ?
ஒப்பாரிப் பாட்டுக்கோர் ஒப்புண்டோ? அஃதேபோல்
எப்பாரில் கண்டீர்கள்? ஈடில்லாக் கற்பனையாம்;70


*வெதிர் - மூங்கில். **வள்ளைப்பாட்டு - உலக்கைப் பாட்டு.