நெய்தற்கலை
பாலாவி என்றிந்தப் பாரோர் புகழ்ந்தேத்த நூலாலே ஆடை நொடியிற் படைத்திருந்தோம்; பாவோ டிழையோடப் பஞ்சாலும் பட்டாலும் ஓவா துழைத்தே உயர்ந்த கலைகண்டோம்; நெய்தற் கலையாவும் *நெய்தல் உரிப்பொருளாய் எய்தாமல் இன்றும் இயக்கி வருகின்றோம்;
இலக்கியக்கலை கல்லைக் கலையாக்கிக் காடெல்லாம் வீடாக்கிச் சொல்லிற் சுடரேற்றிச் சொல்லரிய காவியமென்100 றாக்கிப் படைத்தான், அருங்கலைகள் ஆற்றலெலாம் தேக்கிப் படைத்தான், தெளிதமிழின் பெட்டகம்போல் காதல் சுவைத்திருக்கக் கண்டான் அகமென்று; மோதும் பகைக்களத்து மூள்வோர் புறங்கண்டான் ஓதும் புகழ்சேர் உயர்ந்த புறங்கண்டான்; தீது சிறிதுமிலாத் தென்னாட்டான் நம்நாட்டான் ஆயுங் கலைகள் அனைத்தும் பெருக்கிநலம் தோயும் படிவாழ்வைத் துய்த்திருந்தான்; அவ்வாழ்வு மீண்டும் தழைக்க வியனுலகம் பாராட்ட வேண்டுமீ தென்றன் விழைவு.110 அழகப்பர் கலைக்கல்லூரி காரைக்குடி 28.10.1961
நெய்தல் உரிப்பொருள் - இரங்கல் |