பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 15

நாடு கொடுத்திடும் நாயகன் என்றிவர் தோழமையால்
மூட மதிப்படு சாதி தொலைத்தனர் முன்னின்றார்(10)

கண்டு மகிழ்ந்தனம்; காவி யுடுத்தோர் இளைஞன்*போர்
கொண்டு நெருங்கினன் என்ன விரைந்தனன்; கோளரி**போல்
மண்டி எழுந்தனன் “மாய்த்திடு வேனவன் மார்பினையே
***விண்டுயிர் போக்குவென்” என்று முழங்கினன் வேடுவர்கோன்(11)

நெஞ்சு பொருந்திடும் நேய மிகுந்தவன் அவ்விளையோன்
சஞ்சலம் ஓருரு வாகிய தோஎனச் சார்ந்திடலும்
****செஞ்சர வேடுவன் சிந்தை கலங்கினன் செய்தியுணர்ந்(து)
‡“அஞ்சன வண்ணர்கள் ஆயிரர் நின்னிகர் ஆவாரோ?”(12) <

என்றனன்; “அண்ணலும் யாண்டுளன்” என்றான் வருமிளையோன்;
குன்றன தோளன் கொடியிடை யாளுடன் வாழுமிடம்
சென்றனன்; மூத்தோன் சிறியவ னைக்கண் டருள்பொழியச்
“சென்றுநம் நாட்டினில் நாட்டிடு செங்கோல்” எனமொழிந்தான்(13)

“மண்ணாள் அரசொரு மங்கையின் சொல்லால் முறைகொன்றான்;
அண்ணா! அருளுடன் ஆண்டிட வேண்டும்; அறமொன்றே
கண்ணா நினைந்திடும் கண்ணிய னேநின் அரசுரிமை
நண்ணேன் அரசியல் நாயக” என்றனன் அவ்விளையோன்(14)

அறுசீர் விருத்தம்

கண்டனன் *புளிஞர் வேந்தன்
    கண்களில் நீர்சொ ரிந்தான்;
“மண்தனில் அரசுக் காக
    மாள்கிறார் உடன்பி றந்தார்;


*இளைஞன் - பரதன், **கோளரி - சிங்கம், ***விண்டு - பிளந்து
****சரம் - அம்பு, ‡அஞ்சன வண்ணர் - இராமர்
¶இப்பாடல் பரதன், இராமனை நோக்கிக் கூறுவதாயினும் அக்காலச் சூழலில் மற்றொரு பொருளையும் சுட்டுவது காண்க. *புளிஞர் - வேடர்