பக்கம் எண் :

16கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

கண்டிடின் இவரை என்றும்
    **காழ்ப்பகை தோன்றா” தென்று
***விண்டனன்; பின்னர் நாங்கள்
    விண்ணினில் பறந்து சென்றோம்(15)

எண்சீர் விருத்தம்

வாலி

மலைமுகட்டில் முகில்தவழும் உயர்கிட் கிந்தை
    மாநகரில் இறங்கியதும் மனமு டைந்தேன்;
கொலைமுகத்த கூரம்பு நெஞ்சந் தன்னில்
    குருதியினைப் பாயவிட எண்ண மெல்லாம்
நிலைமுகத்தால் பேசுகின்றான் வாயுஞ் சோர்ந்தான்
    நெடுமலைபோல் புரள்கின்றான் வஞ்ச நெஞ்ச
வலைமுகத்துள் சிக்குண்டான் போலும் என்று
    வருந்திஅவன் யாரென்றேன் ‘வாலி’ யென்றான்(16)

ஏனிந்த நிலையென்றேன்; “உடன்பி றந்தார்
    இருவர்க்குள் நேர்ந்தபகை” எனப்பு கன்றான்;
வானிகந்த வலியானை எய்தோன் யாவன்?
    எனவினவ “ஆண்டுளன்பார்” என்று சுட்டக்
கானிருந்த மரத்தடியில் வில்லைத் தாங்கி
    மறைந்திருந்த கரியவனைக் கண்ணாற் கண்டேன்;
நானிலத்தில் வீரனென்போன் மறைந்தம் பெய்தல்
    நல்லதுவோ? வீரத்திற் கிழுக்காம் என்றேன்(17)

முறுவலித்தான் அப்புலவன்; விடையே யில்லை;
    முணுமுணுத்தான் “உடன்பிறப்புள் பிளவி ருந்தால்
வருபவர்க்கு நல்விருந்தாம் நமது நாடு;
    வம்பெதற்கு? வாவா” வென் றெனைய ழைத்தான்;


**காழ்ப்பகை - முற்றிய பகை, ***விண்டனன் - (கம்பன்) சொன்னான்