*கருவரைகள் பலகடந்தோம் கடல்க டந்தோம் கண்கவரும் எழில்மாட இலங்கை என்னும் பெருநகருள் புகுந்தோம்அங் கரண்ம னைக்குள் பேசுகின்ற இடிமுழக்கம் கேட்டி ருந்தோம்(18) கும்பகருணனும் இராவணனும் “பிறன்பொருளை **வேட்டெழுதல் குற்றம் ஒன்றோ பெருமைக்கும் நம்குடிக்கும் பேரி ழுக்காம் அறன்அன்றாம் மறம்அன்றாம்” என்று ரைத்தான்; “அடகும்ப கருணாஎன் உடன்பி றந்தும் திறனின்னும் அறிந்திலையே! சீசீ போபோ ***தெவ்வருடன் நீயும்போ! இன்றேல் ஓடி உறங்கிடுபோ!” எனக்கனன்று சிரித்தான் வேந்தன் உளம்நடுங்கி உடல்நடுங்கி வியர்வி யர்த்தேன்;(19) “அஞ்சேன்; உன் பகைவர்தமை நண்ணேன்; நீதான் பிழைசெய்தாய்; அண்ணனென இடித்து ரைத்தேன்; செஞ்சோற்றுக் கடன் கழிப்பேன்; சேரார் தம்மைச் சேர்ந்துளவு சொலமாட்டேன் வேந்தே! இன்றே வெஞ்சேனை கொண்டெழுவேன் யானோர் வீரன் வீணனலேன்” என்றெழுந்தான்; என்றன் தோள்கள் நெஞ்சேறி நிமிர்ந்தனவே! வீரங் கொண்டான் நெறிதவறான் நன்றியுளான் வாழ்க வென்றேன்;(20) நிலைமண்டில ஆசிரியப்பா கனவு கலைந்தது “பார்த்தனை தம்பி பற்பல ஆடவர் சேர்த்திடு நெஞ்சில் செந்நெறி ஒன்றே
*கருவரை - கரியமலை, **வேட்டு - விரும்பி, ***தெவ்வர் - பகைவர் |