| 18 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
எவ்வழி ஆடவர் நல்லவர் உளரோ அவ்வழி நிலனும் நன்றென அவ்வை ஓதிய துணர்க! உயர்நிலை பெறுக! மேதினி ஓங்குக” என்றனன் மேலோன்; எவ்வழி ஆடவர் எவ்வழி ஆடவர் எனநான் புலம்பிட என்மனை யாட்டி அவ்வுரை கேட்டே ஆடவர் வீரம் கனவில் தானோ காட்டுவ தென்றாள்; கண்விழித் தெழுந்தேன் கம்பனைக் காணேன் *பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால் ஆடவர் பேசா தடங்குதல் உண்மை அதனால் யானும் அமைதலும் நன்றே,(21) தலைப்பு:கம்பன் கண்டபடி - ஆடவர் இடம்:கம்பன் திருநாள் - காரைக்குடி நாள்:18.3.1954
* பெண்டிர் எழுந்து பேசமுன் வந்தால் என்றது அடுத்துப் பெண்டிர் என்னும் தலைப்பில் பாட வந்தவரைக் குறிக்கும். |