154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
5. புகழ்க்கம்பன் எண்சீர் விருத்தம் புகழ்மிகுத்து வாழ்வாரே வாழ்வார் நல்ல புகழ்விடுத்தார் வாழாதார் என்றே வாய்மை புகல்கின்ற முந்தையருள் முதல்வ னான பொய்யாத மொழிப்புலவன் சொன்னான்; மேலும் புகழ்வருமேல் இன்னுயிருங் கொடுத்து நிற்பர் புன்மைவரும் எனில்உலகே கிடைக்கு மேனும் இகழ்ந்ததனைக் கொள்ளார்நற் சான்றோர் என்றே இளம்பருவப் பெருவழுதி இயம்பி நின்றான்.1 பிறக்குங்கால் புகழோடு பிறப்பா ருண்டு; பிறந்தபினர்த் தம்முழைப்பால் அறிவின் ஆற்றல் சிறக்குங்கால் புகழடைந்து வாழ்வார் உண்டு; செலவழித்து விலைகொடுத்துப் புகழை வாங்கப் பறக்கும்பேர் சிலருண்டு; வேண்டு மென்றே பலர்க்கதனைச் சுமத்துவதும் வழக்கில் உண்டு; பிறக்குங்கால் புகழோடு பிறந்தான் கம்பன் பெருமைக்கே உறைவிடமாய்த் திகழ்ந்து நின்றான்.2 இயலைந்தும் ஐங்குழுவாய் அமர்ந்தி ருக்க, எண்சுவைகள் பேராயம் எட்டாய் நிற்க; மயல்தவிர்ந்த புலமைஎனும் மகுடஞ் சூடி, மக்கள் மன அரியணையில் வீற்றி ருந்து, |