செயல்மிகுந்த உணர்ச்சிஎனும் செங்கோல் தாங்கிச், சீரியநற் கற்பனைவெண் குடைமேல் ஓங்கப் பயன்மிகுந்த கவியுலகை ஆட்சி செய்யும் பாவல்ல முடியரசன் கம்பன் ஆவன்.3 பெண்மையுடன் ஆண்மையுமென் றிரண்டும் ஒன்றின் பேசுமொரு காதலுக்குச் சிறப்பி ருக்கும்; வண்மையுள உணர்ச்சியுடன் இலக்க ணத்தின் வகைசேரின் பாடலுக்கு மதிப்பி ருக்கும்; பண்ணலங்கள் நன்குணர்ந்த முந்தை மாந்தர் பாடலுக்கு வகுத்துரைத்த வழியீ தாகும்; கண்ணெனவே அவ்வழியைப் போற்றிக் கம்பன் கவிமரபைச் சிதைக்காமல் புகழைப் பெற்றான்.4 பணிசெய்வோம் எமைத்தேர்க என்று நம்முன் பணிந்துவரும் வேட்பாளர் வரிசை போல அணியணியாய்ச் சொல்லெல்லாங் கூடி நின்றே அவன்முன்னே தவங்கிடக்கும்; அவற்றில் தேர்ந்து மணியனைய சொல்லெடுத்துக் கோத்து நல்ல மதிப்பேற்றி மெருகேற்றி அணிகள் செய்தான்; அணிமிகுந்த அவன்பாடல் உலக மெல்லாம் அளப்பரிய புகழ்பெற்று வாழக் கண்டோம்.5 விருத்தமெனும் ஒண்பாவால் புகழைப் பெற்றார் வேறொருவர் ஈங்கில்லை; கம்பன் பெற்ற பெருத்தபுகழ் பாரறியும்; வண்ண மெல்லாம் பெருங்களிப்பால் கூத்தாடி நிற்கும் பாட்டுத் |