பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

திறத்தைஒரு பழமொழியே அளந்து கூறும்;
    தென்மொழியான் கம்பன்றன் வீட்டில் கட்டும்
சிறுத்தஒரு தறிகூடக் கவிதை யாகச்
    செப்புமெனில் புகழ்சொல்ல வல்லார் யாரே?6

வில்வளைத்துப் பேராற்றல் விளங்கக் காட்டி
    மிதிலைதரும் எழிலணங்கை மணந்தான் அண்ணல்;
சொல்வளைத்துப் பாவாற்றல் துலங்கக் காட்டிச்
    சொல்லரிய புகழணங்கை மணந்தான் கம்பன்;
மல்விளைக்குந் தோளுடையான் மருங்கு காணா
    அலைமகட்கு மணவணிநூல் சூட்டி நின்றான்;
சொல்விளைக்கும் நாவுடையான் மருங்கு காணும்
    கலைமகட்குச் சுவையணிநூல் சூட்டி நின்றான்.7

‘கற்றறிவு கம்பனுக்குச் சிறிதும் இல்லை
    காளிவந்தாள் அவன்நாவில் எழுதி விட்டாள்’
பற்றுடையார் இவ்வண்ணம் கட்டி விட்டார்
    பகுத்தறிவுக் கொவ்வாத கதையீ தாகும்;
முற்றுணர்ந்த அறிஞனவன், கலைப்ப ரப்பில்
    மூழ்கிஎழுங் கலைஞனவன், காலங் காணாச்
சொற்றமிழிற் கவிஞனவன், நறைப ழுத்த
    துறைத்தமிழில் தோய்ந்தெழுந்த புலவன் ஆவன்.8

தொடுத்திருக்கும் பழம்பாடற் றொடைகள் தாங்கித்
    தொன்மைக்கும் தூய்மைக்கும் முதன்மை காட்ட
எடுத்திருக்கும் எங்கள்தமிழ்க் கடல்க டந்தான்
    எல்லையிலாப் புகழடைந்தான்; தென்பு லத்தை