அடுத்திருக்கும் வடமொழியும் எல்லை கண்டான்; அம்மொழியைப் படிஎன்றே அவனை யாரும் தொடுத்திருந்து வற்புறுத்தித் தொலைக்க வில்லை; துணைமொழியாய்ப் பயின்றதனிற் புலமை பெற்றான்.9 பலமொழிகள் இவ்வண்ணங் கற்று ணர்ந்த பாங்கறிந்து ‘கல்வியினாற் பெரியன் கம்பன் புலவனிவன்’ என்றெல்லாஞ் சான்றோர் வாயால் புகழ்ந்துரைக்கப் பெருவாழ்வு வாழ்ந்தி ருந்தான்; குலமுனிவன் வன்மீகன் காதை கற்றுக் குலவுதமிழ்க் கடவுட்கோர் கோவில் கண்டான் இலகுபுகழ் பெறவாழ்ந்தான் ஏற்றங் கொண்டான் என்றுமுள தென்றமிழ்க்குப் புகழுந் தந்தான்.10 தனக்கொருவர் செய்ந்நன்றி மறவேல் என்ற தமிழ்மொழியும் முந்தைவழி; அதனைக் கம்பன் மனத்திருத்திப் பெரும்புகழுக் குரியன் ஆனான்; மதியுடையான் பாட்டுவளம், வெண்ணெய் நல்லூர் தனக்குரியான் சடையப்பன் மனமு வந்து தந்துவந்த சோற்றுவளம் அன்றோ? அந்தப் பனைத்துணைய நன்றியினை மறவா தென்றும் பாட்டகத்தே பாடிவைத்துப் புகழும் பெற்றான்.11 காரைக்குடி மார்ச்சு, 1965 |