158 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
6. நமது வீரம் கலிவெண்பா வீரமுடன் காதல் விழியாம் எமக்கென்று கூறியிவண் வாழ்ந்த குலத்திற் பிறந்தவர்நாம்; காதலெனிற் காளையர்க்குக் கற்கண்டாம்; அஃதுரைக்க ஈதன்று நேரம்; இருபாலும் போர்முகில்கள் சூழும் பொழுதத்துச் சொல்லரிய வீரமன்றிப் பாழும் பிறவுணர்வைப் பற்றிடுமோ நம்நெஞ்சம்? ஆதலினால் வீரத்தை ஆர்வமுடன் பாடுதற்குப் போதருமுன் அவ்வீரம் பூக்குமிடம் நாமறிவோம்; நாடும் மொழியும் நலமிக்க இல்லாளும் வீடும் முதலா விளம்பும் உரிமைகளில்10 ஊறு விளைவிக்க உள்ளும் பகைகாணின் வீரம் முளைக்கும் விளைநிலங்கள் ஆகுமவை; மன்னர் விளைத்த மறப்போரும், மக்களிங்கு *நென்னல் தொடுத்த அறப்போரும் நேர்சான்றாம்; ‘ஈயென் றிரந்தால் எனதாட்சி மட்டுமன்று மாயும் உயிரெனினும் மாற்றமின்றி ஈந்திடுவேன்; எங்கள்குல மானத்தை ஏற்றமிகும் வீரத்தை இங்கவர்தாம் போற்றாராய் எள்ளிஎமை மோதவரின் போர்க்களிற்றின் காலடியில் புக்கழியும் வேய்முளைபோல் சேர்த்தழியச் செய்திடுவேன்; செங்கட் புலியொன்று20
*நென்னல் - நேற்று |