பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

6. நமது வீரம்

கலிவெண்பா

வீரமுடன் காதல் விழியாம் எமக்கென்று
கூறியிவண் வாழ்ந்த குலத்திற் பிறந்தவர்நாம்;
காதலெனிற் காளையர்க்குக் கற்கண்டாம்; அஃதுரைக்க
ஈதன்று நேரம்; இருபாலும் போர்முகில்கள்
சூழும் பொழுதத்துச் சொல்லரிய வீரமன்றிப்
பாழும் பிறவுணர்வைப் பற்றிடுமோ நம்நெஞ்சம்?
ஆதலினால் வீரத்தை ஆர்வமுடன் பாடுதற்குப்
போதருமுன் அவ்வீரம் பூக்குமிடம் நாமறிவோம்;
நாடும் மொழியும் நலமிக்க இல்லாளும்
வீடும் முதலா விளம்பும் உரிமைகளில்10
ஊறு விளைவிக்க உள்ளும் பகைகாணின்
வீரம் முளைக்கும் விளைநிலங்கள் ஆகுமவை;
மன்னர் விளைத்த மறப்போரும், மக்களிங்கு
*நென்னல் தொடுத்த அறப்போரும் நேர்சான்றாம்;
‘ஈயென் றிரந்தால் எனதாட்சி மட்டுமன்று
மாயும் உயிரெனினும் மாற்றமின்றி ஈந்திடுவேன்;
எங்கள்குல மானத்தை ஏற்றமிகும் வீரத்தை
இங்கவர்தாம் போற்றாராய் எள்ளிஎமை மோதவரின்
போர்க்களிற்றின் காலடியில் புக்கழியும் வேய்முளைபோல்
சேர்த்தழியச் செய்திடுவேன்; செங்கட் புலியொன்று20


*நென்னல் - நேற்று