பக்கம் எண் :

162கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

தானத்த ரானாலும் *தண்டெடுத்துப் போர் முடிப்போம்;
காளைப் பருவத்தீர் காய்ந்தெழுதல் நும்கடனாம்
நாளைத் திருநாட்டின் நாயகங்கள் நீவிரன்றோ?
வீரம் மறவாதீர் வேற்றவர்தாம் நம்நாட்டின்
ஓரம் புகுதற்கும் ஒவ்வாதீர், காவலர் நீர்;
நீதமிலார் தக்கஒரு நேரமெதிர் பார்க்கின்றார்
பேதலித்து நம்முள்ளே பேதம் விளைக்காதீர்;110
செந்நீருங் கண்ணீருஞ் சிந்தி வளர்த்தபயிர்
புன்னீர்மை கொண்டோரால் போயொழியப் பார்ப்பதுவோ?
நாமிருக்கும் நாடு நமதன்றோ? வேற்றவர்தாம்
பூமியினை ஆண்டிருக்கப் புல்லடிமை ஆவதுவோ?
ஆளப் பிறந்தவர்கள் ஆளடிமை செய்வதுவோ
நாளைப் பிறப்பவர்கள் நம்மையன்றோ தூற்றிடுவர்;
வேங்கைப் புலிக்கூட்டம் வீரத் திருக்கூட்டம்
நீங்கள் என அறிவேன்; ‘நேரார்தாம் இந்நாட்டில்
காலெடுத்து வைத்தால் உடலங்கள் காலாகும்;
வாலடக்கி வந்த வழிதிரும்பும்’ என்றுரைத்தால்120
போரெடுத்து வந்திருக்கும் புல்லியர் ஓர்நொடியில்
மாரடைத்துச் சாகாரோ? ‘மான மறவர்யாம்,
எம்முரிமை தீண்டுவரேல் எம்முயிர்கள் வெல்லமல்ல,
எம்முனையும் துச்சமென எள்ளி நகைத்திடுவோம்’
என்றெழுக காளையர்காள், ஏது தடைபடைகள்?
நன்று புரிந்திடுக நாடு தழைத்திடுக;
ஒன்றிவரும் நல்லுணர்வால் உம்பால் உரைக்கின்றேன்
நின்று பணி செய்வீர் நிமிர்ந்து.

காதர்முகைதீன் கல்லூரி

அதிராம்பட்டினம்

5.12.1965


*தண்டெடுத்து - படையெடுத்து