பக்கம் எண் :

தமிழ் முழக்கம்163

7. நீரின் பெருமை

கலிவெண்பா

பூதங்கள் ஐந்தாலும் பூத்ததுதான் இவ்வுலகம்
வேதங்கள் மற்றுள்ள விஞ்ஞான நூல்களெலாம்
ஓதுகின்ற உண்மையிதே; ஓதுமோர் ஐந்தனுள்
தீதகன்ற நானும் திகழ்கின்றேன்; என்னைத்தான்
நீரென்று பேர்குறிப்பர் நீணிலத்தார்; பாருக்கு
வேரென்று சொல்லி வியந்துரைக்கத் தக்கவன்யான்;
நீரின் றமையா துலகமெனக் கூறியபின்
வேறென்ன சான்று விளம்புதற் கீங்குளது?
பற்பலவாம் நற்பண்பு பாரில் எனைப்போலக்
கற்றவரைக் கண்டதிலை; காணுங்கள் என்பண்பை;10
காவிற் செழித்தஒரு கான்முல்லை கொம்பின்றித்
தாவிப் படர்தற்குத் தள்ளாடும் வேளைதனில்
காரோட்டும் கையுடையான் கண்டுமனம் நைந்துருகித்
தேர்காட்டிச் சென்றானோர் தென்னாட்டான் வேள்பாரி;
கூடிவருங் கார்முகில்கள் கொட்டும் மழைநனைக்க
ஆடிவரும் மாமயிலுக் காடைகொடுத் தான்பேகன்;
நாட்டுக் குரியவன்தான் காட்டுக்குச் சென்றாலும்
பாட்டுக் குருகிப் பரிசிலெனத் தன்தலையை
ஈந்தான் ஒருகுமணன் ஈகைக்கோர் பேரரசன்;
வேந்தன் அதியன் விறலிக்கு நெல்லிதந்தான்;20
இவ்வனைய வண்மையினர் ஈரமுள்ள நெஞ்சத்தார்;