பக்கம் எண் :

164கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

அவ்வனைய ஈரந்தான் ஆருக்குச் சொந்தமென்பீர்?
எற்கென்று வாய்த்த இயல்பன்றோ? தண்ணளியாம்
சொற்களித்த தண்மை எனக்குரிய சொத்தன்றோ?
ஊருக்கும் பாருக்கும் ஒத்துழைப்பேன்; சீறிவரும்
போருக்கு நானெழுந்தால் போடும் தடையில்லை!
கற்பனைஎன் றெண்ணேல் கடவுள் எனத்தகுவேன்;
தற்பெருமை யன்றிதற்குச் சான்று பகர்கின்றேன்;
என்னருளை வேண்டாதார் இவ்வுலகில் யாருள்ளார்?
சொன்ன இருதிணையின் சோர்வுதரும் வேட்கைதனை30
நீக்கி மறைத்தருளும் நீர்மை உடையவன்நான்;
காக்குமிக் காரணத்தால் காதல்மீக் கூரஎனை
ஆறென் றழைத்திடுவர், ஏரிகுளம் என்றிசைப்பர்,
ஊறுங் கிணறென்பர், ஓங்கும் அருவிஎன்பர்,
கொட்டும் மழைஎன்றுங் கோலச் சுனைஎன்றும்
சொட்டும் பனிஎன்றும் சூழும் புனலென்றும்
பாயுமொரு வெள்ளமெனப் பற்பலவாம் தோற்றத்தில்
ஆயிரம்பேர் சொல்லி அழைப்பார்கள்; நீக்கமற
எங்கும் நிறைந்திருப்பேன், இல்லா இடமில்லை;
பொங்கும் மகிழ்ச்சியினால் பூசிப்பார் முன்னிற்பேன்,40
விண்ணில் இருப்பேன், விளையாடிக் கூத்திடுவேன்,
மண்ணில் இருப்பேன், மலைமேல் குடியிருப்பேன்,
கட்புலனா காமல் கரந்திருப்பேன், என்னடியைத்
*தொட்டகழும் நல்ல **தொழும்பர்க் கிலக்காவேன்;
பேருருவங் கொண்டு பிறங்கித் திகழ்ந்தாலும்
சீறுருவம் பெற்றுச் சிலகால் வருவதுண்டு;
காட்சி தருமுருவம் காணா அருவுருவம்
மாட்சியுறப் பெற்றிருப்பேன், ஆவியாய் வானெழுந்து
காற்றிற் கலந்திருப்பேன், கார்முகிலா மாறியருள்
ஊற்றிப் பொழிந்துலகோர் உள்ளங் குளிர்விப்பேன்;50


*தொட்டகழ்தல் - தோண்டுதல். **தொழும்பர் - அடியவர்.