பக்கம் எண் :

தமிழ் முழக்கம்167

உள்ளம் மகிழ்விப்பார் உள்ளனரோ? இல்லைஎன்பேன்;
கூவிப் பலகூறிக் கொட்டமடித் தென்மடியில்
தாவிக் குதித்துமிக தாண்டவங்கள் ஆடிடுவர்;110
தோணிபல செய்து சுதந்திரக் கப்பலினால்
வாணிகம் செய்வதுபோல் வட்டமிட்டுத் தாம்மகிழ்வர்;
பேசும்பொற் சித்திரமாம் பிள்ளை விழிக்கடையில்
வீசுமொளி முத்தாய் விளங்கித் ததும்பிநின்று
காவியம் வல்லார்க்கும் ஒவியம் வல்லார்க்கும்
பூவியக்குங் கற்பனைகள் பூத்துவரச் செய்திடுவேன்;
ஊடிவரும் மெல்லியலார் ஒண்மலர்க் கன்னத்தில்
ஓடிவரும் நீராவேன்; ஆடவர் கண்டுவிடின்
ஐம்புலனும் ஒன்றாகி, அந்தோ நடுநடுங்கி,
வெம்பியுளம் வாட்டமுற, வீரம் நிலைகலங்கப்120
பொற்றொடியர் நெஞ்சங்கள் பூரித்தே எக்களிக்க
வெற்றி பெறவே விளையாட் டயர்ந்திடுவேன்;
சால்புணர்ந்தோர் கூறும் தகவுரைகள் கேளாது
கோல்பிறழ்ந்தார் ஆட்சியில் கூழுக்கும் வக்கில்லார்
கூன்விழுந்த மேனி, குழிவிழுந்த கன்னங்கள்,
ஏன் பிறந்தோம் என்றேங்கும் நெஞ்சம், இவையுடையார்
கண்களிலே தேங்கிக் கசிந்து துளியாகி
மண்ணிற் கொடுங்கோன்மை மாய்க்கும் படையாவேன்;
சோர்வின்றிப் பாடுபட்டும் சோறின்றிப் பாடுபட
ஏர்வென்றி கொண்டமகன் ஏங்கித் தவித்திருக்கும்130
மண்குடிலுக் குள்ளே மழைவடிவில் நான்புகுவேன்;
புண்படுமா றந்தமகன் பொன்றும் நிலைகண்டு
மேற்கூரை ஏறிநான் மெல்ல அழுதிருப்பேன்
காற்கூரை எல்லாம் கசிந்துகண் ணீர்வடிப்பேன்;
வண்ணமலர்க் காநுழைவேன்; வாய்திறந்த கிண்ணமென
எண்ணும் படிவிரிந் தேந்தியுள தாமரையைக்
கண்டு மனங்குளிர்வேன்; கண்ணுக் கழகுதரும்