பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

வண்டு தமிழ்பாடும் வண்ண மலர்ச்செடிகள்,
பூத்துக் குலுங்குமெழிற் பூங்கொடிகள் அத்தனையும்
பார்த்துச் சிரிப்பேன்; படர்ந்து வருமகிழ்ச்சி140
இன்பக்கண் ணீராய் இலைநுனியில் பூவிதழில்
மென்பனித் துளிபோல வீற்றுக் கொலுவிருப்பேன்;
பாருலகம் தானியங்கப் பண்ணுதலால் என்பேரை
ஆரமிழ்தம் என்றும் அழைத்திடுவர்; இவ்வுலகில்
உண்பொருளை உண்டாக்கி உண்பொருளும் நானாவேன்;
என்பெருமை இம்மட்டோ? ஏர்முனைநாள் என்னும்நாள்
நானில்லை என்றால் நடந்திடுமோ? ஆழ்கடற்கும்
கானிலுள புல்லுக்கும் கட்டாயம் என்கருணை
வேண்டும் எனவுணர்ந்தே வேதப் பெரும்புலவன்
ஆண்டவன்பேர் சொல்லி அடுத்தபடி என்சிறப்பை150
ஓதி மகிழ்ந்தனன்; ஓயாமல் ஆடிவரும்
பாதிமதி சூடும் பரமன் சடைமுடிமேல்
என்னைஏன் வைத்தான்? எனதருமை கண்டன்றோ!
முன்னைத் தமிழ்ச்சுவையில் மூழ்கித் திளைத்தவன்யான்
ஏறும் சுவைப்பாட்டின் ஏடுகள் நான்சுவைத்தேன்
கூறுமென் சொல்லில் குறையில்லை பொய்யில்லை
நான்சுவைத்து விட்டெறிந்த நாலடியார் ஏட்டைத்தான்
தேன்சுவைபோல் நீங்கள் தெரிந்தெடுத்துப் பாடுகின்றீர்;
மூழ்கி வருவோர்க்கு முத்தளிப்பேன், சிற்சிலகால்
ஆழ்கடலில் செம்பவழ ஆரம் அளித்துவப்பேன்;160
ஈந்துவக்கும் என்னீர்மை எல்லாரும் நன்குணர்ந்தும்
போந்தொருவர் கஞ்சனெனப் பொய்யில் எனையிகழ்ந்தார்;
என்பால், உவர்ப்புண்டாம் யார்க்கும் உதவேனாம்
வன்பால் இவருரைத்த வாய்மொழியை நம்பாதீர்;
நாச்சுவையோ டுண்பது நான்நல்கும் உப்பன்றோ?
பேச்செதற்கு - உப்பிட்ட பேரை இகழ்வதற்கோ?
மூவா திருக்க முடியா துயிரிருக்கச்
சாவா மருந்தளித்தேன் சார்ந்துவரும் வானவர்க்கு;