பக்கம் எண் :

தமிழ் முழக்கம்169

பாலுக்கும் வெண்ணெய்க்கும் பானை திருடிவரும்
மாலுக்கு மால்தந்த மாமகளைத் தந்ததன்பின்170
பாலுங் குடியென்றேன் பாலே குடிகொண்டான்;
நாலுந் தெரிந்தவன்தான் நாகரிகம் தேர்ந்தவன்தான்
பெண்ணெடுத்த வீட்டில் பிரியா திருந்துவிட்டான்
புண்படுத்தும் ஓர்சொல் புகன்றறியேன் இன்றுவரை;
பிச்சைஎடுத் தெந்நாளும் பித்தன்போல் கூத்தாட்டம்
இச்சையுடன் ஆடிவரும் இவ்வாழ்வும் வாழ்வாமோ?
என்று வெறுத்தான்போல் ஆலம் எடுத்துண்டான்
அன்று துடித்தே அமுதம் பொழிநிலவைக்
கொள்ளென் றவற்களித்தேன்; கூறுமிவ் வண்மையால்
வள்ளலென் றோத வகையறியார் என்னைஒரு180
கஞ்சனென்றால் சீற்றம் கடுகிவரும்; ஆனாலும்
நெஞ்சம் வெறுக்கவிலை நீண்ட பொறுமையினேன்;
தண்ணளியால் பார்காக்குந் தக்க பொறுப்புடையேன்
விண்வெளியில் செல்வேன் விரைந்து.

தியாகராசர் கல்லூரி

மதுரைஞு

22.2.1966