170 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
8. பறம்புமலை எண்சீர் விருத்தம் பாடிவருஞ் சுரும்பினங்கள் களிக்கும் வண்ணம் பைந்தேனைச் சுரந்தூட்டும் குவளைப் பூக்கள்; ஊடிவரும் மங்கையர்தம் விழிக ளென்ன ஒளிமின்னிப் பிறழ்ந்துபிறழ்ந் தலையும் மீன்கள்; ஓடிவருந் தென்றலிலே புலர வைத்த ஒள்ளியமெல் லாடையென அலைகள் செல்லும்; ஆடியவர் மனங்குளிர நலமே கூட்டும் அரியநறுந் தண்புனல்சேர் சுனைகள் உண்டு.1 வான்பொய்த்த காலத்தும் சுனையின் ஈட்டம் வற்றாத புனல்சுரந்து வளமை காட்டும்; மான்மொய்த்துத் திரிகின்ற சாரல் எல்லாம் வளவியவேய் நெல்விளைந்து செழுமை காட்டும்; தேன்கைத்த தென்னநறுஞ் சுளைகள் நல்குந் தீம்பலவின் பழம்முதிர்ந்து கனிவு காட்டும்; மீன்மொய்க்குஞ் சுனைகளெலாம் *இறாலு டைந்து மேலிருந்து தேன்சொரிய இனிமை காட்டும்.2 அகழ்வார்க்குப் பசிகளையக் கிழங்கு நல்கி அங்கங்கே கொடிவள்ளி படர்ந்தி ருக்கும்; முகில்பார்க்கும் பொழுதெல்லாம் மயிலின் கூட்டம் முழுமகிழ்வால் தோகைவிரித் தாடி நிற்கும்;
*இறால் - தேன்கூடு. |