186 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
அவ்வை நெடிதிருப்பின் அன்னைமொழி வாழுமெனச் செவ்வை மனமுடையான் சீரதியன் நெல்லிக் கனிகொடுத்த காட்சியிலே காட்டும் பணிவை இனிதெடுத்து வந்த எழிலெல்லாம் பார்மகனே; வார்முரசு கட்டிலிலே வந்து துயில்கின்ற சீர்வரிசைப் பாவலர்க்குச் செங்கோல் அரசனங்கு நின்றிருந்து வெண்கவரி நீள்கையால் வீசுகிற அன்றிருந்த காட்சி அழகெல்லாங் காண்மகனே; பாவேந்தர் தம்மைப் பணிந்து மதித்துவந்த பூவேந்தர் ஆண்டிருந்த பொற்காலம் அக்காலம்;60 மீண்டுமொரு பொற்காலம் மீளத் திருவுளத்துப் பூண்டெழுந்த என்மகனே போராட்டப் பாட்டெழுது; ஆளும் பொறுப்பேற்றோர் ஆட்சி பிழைத்துவிடின் வாழுமொரு பெண்ணும் வழக்குரைத்து நீதிபெறும் நாடடா ஈதென்று நாளெல்லாஞ் சொல்பவளைப் பாடடா கண்ணகியைப் பாரடா, முன்னைப் *புறங்காட்டும் வீரர் புறங்காட்டாப் போரின் திறங்காட்டி நிற்கின்ற தீரத்தைக் காட்டுகின்ற கோட்டைப்போர்க் காட்சியினைக் கூர்ந்து மனத்திறுத்தி நாட்டுக்கோர் பாட்டெழுதி நல்கி மகிழ்ந்திடுநீ;70 போரெடுத்துச் சென்ற புகல்களிற்றைப் பூட்டிநெற் போரடித்த காட்சிப் பொலிவினையும் இங்கேகாண்; பண்டைப் புகார்நகரில் பண்டங்கள் கொண்டுசெல அண்டைப் பிறநாட்டார் அண்டிவருங் காட்சியைப்பார்; நீலத் திரைக்கடலில் நீந்திவருங் கப்பலுடன் கோலத் திருமுகத்தன் கொள்கைப் பெருங்கோமான் செந்தமிழன் வீர சிதம்பரன் நிற்கின்றான்
*புறம்காட்டும் - புறநானூறுகாட்டுகின்ற. |