இந்தநிலை கண்டுணர்தல் இன்றைக்குத் தேவையடா; செஞ்சிக்கோன் தந்த செழுங்கோட்டை மாட்சியிது; வஞ்சிக்கோன் தம்பிமுதல் வார்த்தெடுத்த காப்பியங்கள்80 ஐந்து மகவாக ஆங்கே அருகிருக்க மைந்துடன்நான் நிற்கின்ற மாண்புயர்ந்த காட்சியிது; ஆறுபடை வீடெழுப்பி ஆங்கருகில் நக்கீரன் வீறுபெற நிற்கும் விறல்மிகுந்த காட்சியைப்பார்; பாவை நலம்பாடிப் பள்ளிகொளும் ஆரணங்கைப் பாவை துயிலெழுப்பும் பாங்கினையும் ஈங்கேகாண்; மாமல்லைக் காட்சி, மனுநீதிச் சோழனொடு பூமுல்லை தேர்பெற்ற பொற்பினையும் காணுகநீ; பாரெல்லாம் என்பெயரைப் பாடிப் புகழ்ந்தேத்தச் சீரெல்லாஞ் செய்துவரும் செம்மை யுளத்தானாம்90 உன்னண்ணன் நல்லெண்ணம் ஓங்கிவரும் நல்லண்ணன் என்கண்ணன் ஆங்கே எழிலுடனே நிற்கின்ற தோற்றத்தைக் காட்டுகிற தூய சிலையுருவின் ஏற்றத்தைக் கண்டுமகிழ்’ என்றாள் தமிழன்னை; ஊர்வலத்தைக் கண்டேன் உணர்ச்சி வயப்பட்டேன் பேருளத்தில் இன்பமிகப் பெற்று. உலகத்தமிழ் மாநாடு சென்னை 6.1.1968
அண்ணன் - பேரறிஞர் அண்ணா. |