190 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
நெல்லுக்கே என்றிறைத்த நீரைக் கருணையினால் புல்லுக்கும் ஆங்கே பொசியவைப்பேன்; அக்கருணை போற்றாமல் என்னைப் புறக்கணித்து வந்தவிழல் சேற்றோடு சேறாகச் சீரழியச் செய்துவிடப்60 போராடும் காராளர் பொன்றாக் களமறவர் ஏராளம் ஏராளம் என்பாற் பணிபுரிவார்; மண்ணின் வலிமைமிகும் மார்பைப் பிளந்தெறியும் எண்ணில் உழுகலங்கள் எல்லாம் படைக்கலங்கள்; நாட்டை வலுப்பபடுத்த நான்விரும்பி எத்தனையோ கோட்டை புகுந்தங்குக் கொண்டதுண்டு வெற்றிபல; ஆர்க்கும் ஒலியோ டணிவகுத்து நிற்கின்ற போர்க்களங்கள் போய்ப்புகுந்து போர்விளைத்து வந்தவன்நான் இத்தனையும் பெற்றுள்ள என்னை அரசனெனச் சொற்றமொழி யாரே துணிந்து மறுத்துரைப்பார்?70 நெல்லே ருழவரெனும் நேரியரிங் கில்லைஎனில் வில்லே ருழவரெங்கே? சொல்லே ருழவரெங்கே? இவ்வண்ணம் என்பெருமை எவ்வளவோ ஈங்குளவாம்; அவ்வளவும் சொல்லில் அடங்கிடுமோ? என்றாலும் ஏனோ பதரென்றே என்குலத்தைத் தூற்றுகின்றார்? நானோஇம் மாந்தர் நகைப்பிற் கிடமானேன்? மக்களிலே மிக்கபதர் வாழ்வதனைக் கண்டிருந்தும் தொக்கஅவர் கூட்டத்தைத் தூற்றா திருக்கின்றார்; வைக்கோலாய் மற்றும் உமிதவிடாய் வந்தாலும் எக்காலும் அவ்வடிவில் என்னால் உதவியுண்டு;80 மக்கள் பதரானால் மாநிலத்தில் யாருக்கும் தக்க உதவி தருவாரோ? தந்ததிலை; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோர் என்றென்னைப் பண்டொருவர் நன்முறையிற் பாராட்டிச் சொன்னாலும் நெஞ்சந் துணிந்தொருவர் நெல்லுமுயிர் அன்றென்று வெஞ்சொல் மொழிந்தென்றன் விஞ்சு புகழ்குறைத்தார்; செல்வமென என்னைத்தான் செப்பிடுவார் முன்பெல்லாம் வல்வினையர் செல்வமென மற்றவற்றை இன்றுரைப்பர்; |