காட்டுமரம் என்றாலும் மீன வர்க்குக் கட்டுமர மாகி, அது கடலில் ஓடும்; நாட்டரசன் கையகத்துச் செங்கோ லாகி நல்லாட்சி புரிகின்ற குறியைக் காட்டும்; கேட்டுணரும் மாணவரை முறைப்ப டுத்தக் கேள்விமிகும் ஆசான்கைக் கோலாய் நிற்கும்; வீட்டகத்தே தூணாகிப் பிறவும் ஆகி விளைக்கின்ற பயனெல்லாம் விளம்பப் போமோ?7 இடுக்கண்கள் பலவாகிச் சூழ்ந்த போதும் இயல்பொன்றுங் கெடுதலிலாச் சான்றோர் போல அடுத்தடுத்துத் தேய்த்தாலும் சிறிது கூட அதற்குரிய மணங்குன்றா மரங்க ளுண்டு; படுக்கின்ற நிலையுற்ற பெற்றோர் தம்மைப் பரிவுடனே தாங்குகிற மக்கள் போல, விடுக்கின்ற வேர்சிதைந்து முதிர்ந்த காலை விழுதுகளால் தாங்குகிற மரங்க ளுண்டு.8 ஓங்குபுகழ் இவ்வளவுங் கொண்டி ருந்தும் ஓரிரண்டு குறைகளையும் பெற்ற துண்டு; தீங்குடைய கீழ்மக்கள் தாம்பி றந்த தேயத்தைக் கேடுறவே செய்வ தைப்போல் நீங்கரிய காட்டகமாந் தாய கத்தை நெருப்பதனால் கேடுறுத்தும் மரமும் உண்டு; மூங்கிலெனும் அம்மரந்தான் மோதி மோதி முன்பிறந்த வீட்டுக்கே கொள்ளி வைக்கும்.9 அரம்போலுங் கூர்மைமிகும் அறிவ ரேனும் அயலவர்தம் துயர்க்கிரங்காச் சிலரைப் போல மரஞ்சூழும் காட்டகத்தே அருகில் நிற்கும் மரமொன்று வாடுகிற பொழுது கண்டும் |