20 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
*புலவர்பெருஞ் சித்திரனார் வறுமை போக்கப் புரவலர்பாற் பலபரிசில் பெற்று வந்து குலமனையாள் கைக்கொடுத்து, நயந்தோர்** யார்க்கும் கூடிமகிழ் உறவினர்க்கும் பிறர்க்கும் நல்கி, நலம்நுகர நாளைக்குத் தேவை என்று நயவாமல், என்னொடுஞ்சூ ழாமல்,*** நல்கிச் செலவழித்து மகிழ்வோம்நாம் எனப்பு கன்றார்; செல்வத்துப் பயனீதல் காட்டும் எண்ணம்(3) விருந்தயரும் பெருங்களிப்பால் வடக்கில் வாழ்வோர் விளைவறியார் தென்புலத்து வேந்தர் வீரம் குறைந்ததென இகழ்ந்துரைத்தார்; அதனைக் கேட்டுக் கோளரிபோல் வெகுண்டெழுந்து தமிழர் ஆற்றல் புரிந்துகொளச் செய்தான்அச் சேரன்; யாரும் புகழ்மிக்க தமிழினத்தைப் பழித்து ரைத்தால் எரிந்தெழுதல் தமிழனுக்குக் கடமையாகும் என்கின்ற இனப்பற்றைக் காட்டும் எண்ணம்(4) தன்பால்வந் திரந்தோனுக் கில்லை என்னான் தலைதந்தான் ஒருகுமணன்; பாடல் கேட்கும் அன்பார்வம் தலைதூக்க அரிய நெல்லிக் கனியொன்றை அதியனுமோர் அவ்வைக் கீந்தான்; வன்பாலை நடந்தயர்ந்தோன் முரசம்¶ வைத்து வணங்குகட்டில் எனஅறியா துறங்க, வேந்தன் அன்பாக அருகிருந்து கவரி வீசி‡ அகமகிழ்ந்தான்; தமிழறிந்து மதிக்கு மெண்ணம்(5)
* இப்பாடல் புறநானுற்றுப் பாடற் கருத்து **நயந்தோர் - விருமபியவர்கள், ***சூழாமல் - கேட்காமல் ¶முரசு கட்டிலில் உறங்கியவர் - மோசி கீரனார் ‡கவரி வீசிய வேந்தன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை |