206 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
அதுவேண்டும் இதுவேண்டும் எனவி ரும்பி அடிவருடிப் பிழைக்கின்ற கயமை வேண்டான்; எதுவேண்டும் நாடுயர என்று நோக்கி எழுச்சிமிகு கவிதைகளை ஈந்து நிற்பான்; மதுவேண்டும் வண்டெனவே மாறி மாறி மாற்றார்க்கு வால்பிடித்துத் திரிய மாட்டான்; சதிவேண்டான் மற்றவரைத் தாழ்த்த எண்ணான், சங்கத்துப் புலவனென வாழ்ந்த மேலோன்.7 பாரிவிழா பறம்புமலை 18.4.1970 |