பக்கம் எண் :

தமிழ் முழக்கம்207

16. பாவேந்தர் வழங்கிய கொடை

எண்சீர் விருத்தம்

பூவேந்தர் வழங்குகொடை, காலப் போக்கிற்
    போய்மறையும் நிலைமைத்தாம்; பெருமை சான்ற
நாவேந்தர் வழங்குகொடை கால மெல்லாம்
    நலம்பயந்து நிலைத்திருக்கும்; பாண்டி தந்த
பாவேந்தன் வழங்குகொடை கவிக்கு லத்துப்
    பரம்பரையாய்த் தலைமுறைகள் தோறும் நிற்கும்;
சாவேந்திப் போனபினும் தழைத்து நிற்கும்
    தகைமைத்தாம் அக்கவிஞன் தந்த செல்வம்.1

பாவேந்தன் வழங்குகொடைப் பெருமை எல்லாம்
    பகுத்தெடுத்து வகைப்படுத்திச் சிறப்பை எல்லாம்
நாவேந்திப் பாடுதற்கு யாரால் ஒல்லும்?
    நாளொன்று போதுவதோ? பலநாள் வேண்டும்;
கோவேந்தர் போலஎழில் தோற்றங் கொண்டோன்
    கொடைசொல்லக் காவியங்கள் பலவும் வேண்டும்;
பூவேந்தும் நறவமென இனிக்கும் செஞ்சொற்
    புரட்சிப்பாக் கொடைஞனவன் கொற்றம் வாழ்க.2

குருட்டுலகில் இருட்டறையில் வாழ்வோர்க் கெல்லாம்
    குடும்பவிளக் கேற்றியறி வொளியைத் தந்தான்;
திருட்டுமனப் போக்கர்தமைச் செருக்க டக்கித்
    தீந்தமிழை வளர்ப்பதற்கு வழியைச் சொல்லித்