208 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
தெருட்டுகின்ற தமிழியக்கம் ஒன்று தந்தான்; திரிகாற்று கதிர்திங்கள் இவற்றி னுள்ளே உருக்கொண்டு சிரிக்கின்ற அழக னைத்தும் உருவாக்கி நமக்களித்தான் உலகம் போற்ற.3 கூத்தடிக்க நாடகநூல் தந்தா னல்லன் கொள்கைக்கே நாடகங்கள் எழுதித் தந்தான்; பூத்தொடுத்த குழல்மடவார் தம்மைத் தாழ்த்தும் புன்மைகளை மாய்ப்பதற்கு, வீரம் மிக்க பாத்திறத்தான் தமிழச்சி ஏந்தும் கத்தி படைத்தளித்தான்; நினைந்துநினைந் துள்ளம் பொங்க ஏத்தெடுக்கும் முத்திரையாய் விளங்க வேண்டி எதிர்பாரா முத்தமொன்று தந்து வந்தான்.4 காவியங்கள் எனும்பெயரில் நல்ல நல்ல கருத்துகளை உள்ளடக்கி நிலைத்து நிற்கும் ஓவியங்கள் பலதந்தான்; பரிசி லாக உயர்பாண்டி யன்பரிசில் எனும்நூல் தந்தான்; பூவியங்கும் செழுந்தேனோ? கரும்பின் சாறோ? புரட்சிக்கு நடும்வித்தோ என்று மக்கள் நாவியந்து போற்றுவணம் தொகுதி யாக நல்லகவி மலர்தொடுத்து நமக்க ளித்தான்.5 பயில்கின்ற நெஞ்சமெலாம் வண்டாய் மொய்த்துப் பைந்தமிழ்த்தேன் சுவைக்கின்ற முல்லைக் காடு; மயில்திரியும் தென்பொதிகைக் குற்றா லத்து மலையிறங்குந் தேனருவி; துன்பம் என்னும் மயல்இரிய நம்முளத்தை இளமை யாக்கி மகிழ்வுதரும் இசையமுது பாடித் தந்தான்; இயல்பினிலே அமைதியினன்; எழுச்சி கொண்டால் இரணியன்தான், எதிர்நிற்க எவரு மில்லை.6 கொடைதந்தான் பாவேந்தன் பெற்றுக் கொண்டோம்; கொடுத்தவற்றைப் பயன்படுத்தி வாழ்ந்த துண்டா? விடைதந்து தலைநிமிர்ந்து நிற்ப தற்கு விதியுண்டா? மதியுண்டா? வெட்கம்! வெட்கம்! படைதந்தான் வீரரென நமைநி னைந்து; |