210 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
தமிழ்நாட்டுப் பாடகரே தமிழைப் பாடித் தமிழ்மானம் காத்திடுவீர் என்று சொன்னான்; அமிழ்தூட்டும் தாய்மொழியைப் பாடா ராகி அவர்மானம் தமிழ்மானம் அனைத்தும் விட்டார்; தமிழ்வேட்டுப் பாடுதற்கு முனைந்த பேரைத் தமிழ்ப்பகைவர் படுகுழியில் அழுத்து கின்றார்; தமிழ்நாட்டு மாந்தரெனும் நாமும் சேர்ந்து ததிங்கிணத்தோம் போடுகின்றோம் மானம் கெட்டு.11 வேறு உன்னை வளர்ப்பன உணவே - உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்ன வழங்கினன் பாடல் - எனினும் எதனை வளர்த்தனம் இங்கே? தென்னை வளர்ந்தது போலே - இந்தத் தேகம் வளர்ந்தது மேலே கன்னல் நிகர்த்திடும் தமிழை - நெஞ்சில் கட்டி வளர்த்ததும் உண்டோ?12 கொடியோர்செயல் அறவே ஒரு கொலைவாளினை எடடா! இடியேறெனப் புலியேறென எழுவாய்கணை தொடடா படிவாழவும் தமிழ்வாழவும் பகைமாயவும் கொடுவாள்* பிடிவாவெனத் தருவான்எனின் பெறவேயிலை அதையே.13 தலையாகிய அறமேபுரி சமவாழ்வினைப் பெறவே இலையோ உரம்? மலையோபகை? எழுவாய்தமிழ் மகனே!
*கொடுவாள் - வளைந்தவாள்< |