பக்கம் எண் :

26கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

4. உணவு

கலிவெண்பா

உணவுதனைப் பற்றி உயர்கவிதை யாக்கக்
கனவுலகிற் சென்றேன்: கடும்பசியோ என்வயிற்றில்

ஆடித் திரிந்துழல ஐயையோ என்புலமை
ஓடித் தறிகெட் டொருசொல் வரக்காணேன்:

பாழ்பசி வந்துவிடின் பத்தும் பறந்துபோம்
சூழ்நிலையை இன்றுணர்ந்தேன்: தூய மனத்தெளிவும்

பொங்கும் கவியுணர்வும் பூரிக்கும் நன்மகிழ்வும்
தங்குமோ இவ்வுலகில் சாரும் உணவின்றேல்?

அன்பேது? நெஞ்சில் நிறைவே(து)? அறிவமைதி
என்பதுதான் ஏதேது? வாழ்க்கை வளமெய்த

உண்டியொன்றே வேண்டுவ(து): உண்மையீ தென்பதனைக்
கண்டுணர்ந்தேன் ஆதலினால் கால்வயிறே னும்நிரப்பிச்

செய்யுள் புனைவமெனச் சிந்தித்துச் சேயிழாய்!
உய்யும் வகையுண்டோ உண்டி சிறிதுண்டோ?

என்றேன்; செவியேற்ற ஏந்திழையாள் ஓடிவந்து
“சென்ற முதல்நாளிற் செய்தபடி செய்தேன்”

எனவுரைத்தாள்; பொங்கலோ? என்றெழுந்தேன்; “இல்லை
மனவருத்தம் பொங்கலலால் மற்றில்லை பக்கத்துப்