பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 45

இனியேனும் அவ்வுலகை இங்காக்க முற்படுவோம்
முனியாமல் அவ்வுலக முழுப்பொருளும் காண்போம்நாம்:

யாதும் ஊரே

யாதும்நம் ஊரென்றால் ஏதிலர்தம் நாடெல்லாம்
சூதுமுறை செய்து சுருட்டி விழுங்குவதா?

யாதும்நம் ஊரென்றால் ஏதிலர்க்கு* நம்நாட்டைச்
சூதுநெறி யறியாமல் சுருட்டிக் கொடுப்பதுவா?

அன்றதுதான் பேதைமையாம்; அவ்வவர்க்கு மொழியுண்டு
தொன்றுதொட்ட பண்புண்டு சொல்வதற்கு நாடுண்டாம்

இவ்விவற்றால் பகையின்றி எதிர்ப்பின்றிப் பிறவற்றை
வவ்வும் மனமின்றி வாழும் நெறியறிந்து

நட்புறவால் உளமொன்றி நடப்பதுவே அதன்பொருளாம்
பெட்புற்றுத் தமிழ்காட்டும் இவ்வுலகைப் பேணுவம்நாம்;

யாவரும் கேளிர்

அi2 னவரும்நம் கேளிர்என்ற அம்மொழியும் அப்படியே,
இனம்பலவாய் வாழ்ந்தாலும் இறுமாந்து பகைகொண்டு

விலங்கினத்தின் கீழினமாய் விளையாடித் திரியாமல்
குலங்கருதி மேலென்றுங் கீழென்றுங் குறியாமல்

அவ்வவர்தம் நெறிபோற்றி அன்பொன்றே குறியென்று
செவ்வியநன் மனங்காத்துச் செயலறமும் மிகக்காத்துத்

தோழமையால் ஒன்றாகித் தூய்மையொடு உறவாகி
வாழ விழைகஎன வகுத்ததுவே அதன்பொருளாம்;

சாதிச் சழக்குண்டு சமயப் பிணக்குண்டு
மோதிப் பகைக்க முரண்பட்ட அனைத்துண்டு*


*ஏதிலர் - அயலவர் *அனைத்துண்டு - அனைத்தும் உண்டு என்பதிலுள்ள உம்மை தொக்கது.