56 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
“ஆட்டுவிக்க ஆடாமல் நாமே ஆள அரசுரிமை எய்தியபின் யாவ ரோடும் கூட்டுறவு கொளல்நன்றாம் தமிழும் வாழும் குலையாமல் தென்னகமும் வாழும்” என்று கூட்டமெலாம் திரு. வி. க. கூறி வந்தார்; குறுகியநோக் கென்றுசிலர் திரித்துச் சொல்லிக் காட்டுவதை நம்பாதீர்! தென்ன கத்தைக் காப்பதுவே நமதுகடன் வாரீர்! வாரீர்!(28) தலைவர்:வள்ளுவர் வழியில் திரு.வி.க. இடம்:குறள் விழா - காரைக்குடி நாள்:11-8-1957
இவ்விழாவில் பேசிய ஒருவர் சான்றோர்களை உண்டாக்கித் தந்தால் தெற்குத் தேயாது என்றார். அவர்க்கு மறுமொழி தரும் வகையில் கவியரங்கத் தலைப்புகளாகத் தரப்பட்ட சான்றோர்களை அமைத்துப் பாடப்பட்டது முடிப்புரை. |