பக்கம் எண் :

68கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

சிந்தித்துச் சீர்தூக்கிச் செப்புகிற நல்லுரையை
வந்தித்துப் போற்றி வரவேற்க வேண்டுமடி!

“ஆள்கின்ற நாமே அறிஞரிவர் சொற்கேட்டால்
தாழ்வன்றோ?” என்னும் தவறான எண்ணத்தால்

புத்துலகம் காண்பதில்லை; புற்றுலகங் காட்டிவிடும்
தத்தைமொழி! என்றேன்; தடுத்து நிறுத்தி,

“அறிஞர் புகழ்பாடல் ஏனத்தான்? நன்கு
புரியும் படியாப் புகன்றிடுவீர்” என்றுரைத்தாள்;

வானொலியார் கட்டளை

கண்ணழகி! வானொலியார் கட்டளைதான், புத்துலகம்
பண்ணுதற்கு நல்லறிஞன், பாவல்லான், விஞ்ஞானி,

ஏருழவன், வாணிகன்,* இத்தகையார் தம்பங்கில்
பேரறிஞன் பங்கிசைக்கப் பேணிக் கொடுத்ததனால்

பாடுகின்றேன் என்றதும், அப் பாவை விழிசிவந்து,
“நாடு புதுமைபெற நங்கையரைத் தள்ளிவிட்டீர்!

புத்துலகில் பெண்ணைப் புதைத்துவிட்டீர்!” என்றெழுந்தாள்;
இத்தவறு நானோ இழைத்தேன்? கனிமொழியே!

எய்தவனை நோகா தெனைக்கடிந்தாய்! வானொலியார்
செய்தபிழைக் கென்செய்வேன்? சேயிழையே! சற்றுக்கேள்!

அறிஞன் இல்லா அரசு

பொற்சிலம்பை விற்கவந்த பூம்புகார்க் கோவலனைப்
பொற்கொல்லன் சொற்கேட்டுப் பொல்லாக் கொலைசெய்து


*அறிஞன், கவிஞன், விஞ்ஞானி, உழவன், வாணிகன் என்பன வானொலி யார் தந்த தலைப்புகள்.