பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 71

என்னுமோர் ஐயம் எழுப்பினள் என்மனையாள்;
இன்னும் இருக்கின்றார் எத்துணையோ பேரென்றேன்;

அவர் யார்?

“ஓரிருவர் சொல்லுங்கள் அத்தான்!” எனவுரைத்தாள்;
யாரெனநான் ஈங்குரைத்தல் நன்றன்று மற்றொருநாள்

அப்பெயரைச் சொல்கின்றேன் என்றேன்; முகஞ்சுழித்துத்
“தப்பென்ன? சொல்”கென்றாள்; சத்தமின்றிக் காதருகே

பேர்சொன்னேன்; மாமழையின் பேரருளால் என்வீட்டில்
நீர்சொட்டக் கண்விழித்தேன் நேற்று.

தலைப்பு:புதியதோர் உலகு - அரசியல் அறிஞன்

இடம்:வானொலி நிலையம் - திருச்சிராப்பள்ளி

நாள்:14-4-1958 விளம்பி ஆண்டுப் பிறப்பு