பக்கம் எண் :

கவியரங்கில் முடியரசன் 85

13. பாரதி - வீரன்

எண்சீர் விருத்தம்

பாரறியும் சரவணனார் தவக்கொ ழுந்தே!
    பரம்பரையாற் பெறுபுலத்தாற் கலையை ஆய்ந்து

சீரறியும் கூரறிவுச் சான்றோய்! ஞானச்
    செந்தமிழ்வல் சம்பந்தா! தலைமை கொள்வோய்!

பாரதியின் புகழ்பாட விழைந்து வந்த
    பாவலர்காள்! அவையோரே! வணக்கம்; என்னை

வீரன்புகழ் பாடென்று விதித்து விட்டார்
    வீரத்தை மீசைதனிற் கண்டார் போலும்(1)

பாரதியின் தாசனுக்குப் ‘பொன்னி’ கண்ட
    பரம்பரையில் வந்தமையால் வீரம் என்பால்

சேருமெனக் கருதினரோ? யாது சொல்வேன்!
    செந்தமிழில் தாய்நாட்டில் பற்று மிக்கோர்

ஆருமுரம் மிகப்பெற்று வீர ராவர்;
    அப்பற்றும் கவிநெஞ்சும் வாய்க்கப் பெற்ற

பாரதியை வீரன்தான் என்று கூறல்
    பசுவின்பால் வெண்ணிறந்தான் என்றல் போலாம்(2)

யார் கவிஞன்?

காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;
    கைம்மாறு விழைந்துபுகழ் பெறுதல் வேண்டி