காலனெனும் பேரானைக் கூவி, உன்னைப் புல்லெனவே கருதுகின்றேன் வாடா என்றன் காலருகே மிதிக்கின்றேன்” என்று ரைத்த கவிவீரம் நினைப்போர்க்கு வீரம் ஊட்டும்(12) அச்சமிலான் பாண்டவரில் மூத்தவனாம் தருமன் தன்னைப் பண்புடையான் அறமுடையான் என்று சொல்லி ஆண்டவனாப் போற்றுகின்றார்; அவனி ழைத்த பெரும்பிழையை ஆர்சொல்வார்? அஞ்சு கின்றார்; “தீண்டரிய சூதாடிப் பணயம் என்று தேயத்தை வைத்திழந்தான்; சீசீ நாட்டை ஆண்டஇவன் சிறியர்செயல் செய்தான்” என்றே அரசுமுறை பிழைத்தமையை வீரன் சொன்னான்(13) சாதிப் பூசல் சாதியினால் தாழ்வுயர்வு பேசிப் பேசிச் சாத்திரத்தை வேதத்தைச் சான்று காட்டிப் பாதியில்நாம் படுகுழியில் வீழ்ந்து விட்டோம்; பறையனென்றும் குறவனென்றும் பார்ப்பான் என்றும் ஆதியிலே இல்லாத பழக்கந் தன்னை அணுகவிட்டோம்; அடிமையுற்றோம்; மிடிமைப் பட்டோம்; ஆதலினால் சாதியினை ஒழிக்க வேண்டி ‘ஆடுவமே’ எனும்பாடல் பாடித் தந்தான்(14) தோற்றுவிட்டான்! பொல்லாத கொடுமைகளை விளைத்து நிற்கும் பொய்ம்மைகளை அழித்தொழிக்கும் சாதிப் போரில் எல்லாரும் ஓர்குலமாய் வாழ்க என்றும் எல்லாரும் சமமென்ப துறுதி யென்றும் |