பக்கம் எண் :

96கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

கனிவான தமிழ்மொழியை வளர்ப்போம் காப்போம்;
    கடுகிவரும் பகையுளதேல் எதிர்ப்போம் மாய்ப்போம்;

தனியான நிலையொழித்து வருவோம் சேர்வோம்;
    தமிழ்நாடு நமதாக முயல்வோம் வெல்வோம்;

குனியாத மனனோடு வளர்வோம் வாழ்வோம்;
    குகைவாயில் அரிபோல எழுவோம் நாமே.(12)

தேவகோட்டைத் திருவள்ளுவர் விழாக் கவியரங்கில்

தலைமை ஏற்றுப் பாடிய பாடல்

நாள்:10-5-1959