10 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
நாளைய நாடுன தாட்சியிலே- என நாடி நடந்திடு மாட்சியிலே காளையே தீமையைக் காய்ந்துவிடு-பல கற்றவர் நூல்களை ஆய்ந்துபடி தோளினைப் பாரினில் தூக்கிநட-வரும் தோழனே கீழ்மையைத் தாக்கிவிடப் பாளைச் சிரிப்பினைக் காட்டிடுவாய்-அதிற் பண்புகள் யாவையும் ஊட்டிடுவாய் தீய குணங்களைத் தூக்கிஎறி- அது தெள்ளிய நாட்டினைக் காக்கும் நெறி தூய மனத்தினைப் போற்றிநட-பொதுச் சொத்தினைக் கண்ணெனக் காத்துநட சேயுன தன்னையின் நாடுயர-மனச் செம்மையைக் காத்திடப் பாடுபடு தாயக மேன்மையை ஆக்கிவிடு-வளர் தம்பிஎன் வேதனை நீக்கிவிடு |