பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே11

3
நெஞ்சத் துடிப்பு

விழிசுமந்த அருளாலே வருவோர்க் கெல்லாம்
      விருந்தளித்தோம் வரவேற்றோம் நட்புங் கொண்டோம்;
வழிசுமந்த பண்பாடு தமிழர்க் கென்றே
      வாய்நிறையப் புகழ்ந்துரைத்தார் மகிழ்ந்தோம்; ஆனால்
எழில்சுமந்த என்நாட்டார் வந்தோர்க் கெல்லாம்
      ஏமாந்து குனிகின்ற பித்த ராகிப்
பழிசுமந்து போனாரே என்ற போது
      பதைபதைக்கும் துடிதுடிக்கும் எனது நெஞ்சம்.

நல்லவர்யார் கெட்டவர்யார் என்ப தோரார்;
      நலிவகற்றி நலந்தந்து நாட்டை யாள
வல்லவர்யார் அல்லவர்யார் அதுவும் தேரார்;
      வாயினிக்கப் பேசுவதை நம்பு கின்றார்;
மெல்லியஓர் மின்மினியை ஒளிவி ளக்கா
      மேடைதனில் வைத்துவிட்டார்; இதனைச் செய்தார்
மெல்லியலார் என்றுரைப்பர்; ஆண்க ளென்ன
      விதிவிலக்கா? இதையெண்ணித் துடிது டித்தேன்

‘சாதிகளே இல்லையடி பாப்பா நம்முள்
      தாழ்வுயர்வு சொல்லுதலே பாவம்’என்றே
ஓதியஓர் பாரதியும் செத்துவிட்டான்
      உட்புகுந்த சாதிகளோ சாக வில்லை;