பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்111

5
வண்ணமும் எண்ணமும்

செங்கதிரோன் கீழ்வானில் முகத்தைக் காட்டிச்
      செவ்வொளியால் உலகுக்கு வண்ணம் பூசிப்
பொங்கிவரும் பேரெழிலைப் படைக்கும் போது
      பொதியத்து மலைச்சரால் கண்டு நின்றேன்;
அங்கிருக்கும் அழகெல்லாம் விழியா லுண்டேன்
      அடடாஓ! அடடாஓ! என்று நெஞ்சம்
பொங்கியதாற் கவியானேன்; ஆடிப் பாடிப்
      புகலரிய இன்பத்தில் திளைத்து நின்றேன்.

கொடிவிரித்த மலர்கண்டேன் கிளையில் நீரில்
      குலவுகின்ற மலர்கண்டேன் தலைய சைத்துச்
செடிசிரிக்கும் மலர்கண்டேன் அவற்றி லெல்லாம்
      செப்பரிய வண்ணங்கள் சிந்தை யீர்க்கும்
படியிருக்கக் கண்டுகளி கொண்டேன்; காற்றில்
      பரவிவரும் நன்மணத்தில் ஒன்றி நின்றேன்;
செடிகொடியில் இதழ்விரித்த மலர்கள் தோறும்
      தேனீக்கள் படிந்தெழுந்து போதல் கண்டேன்.

இதழ்சுவைத்து நறவருந்தி விரைந்து சேர்க்கும்
      ஈகண்டேன் எழுத்தாளர் நினைவு கொண்டேன்;
கதவடைத்த கற்பனையைத் திறந்து புக்குக்
      கருத்துடனே சிந்தனையாம் மலர்தி ளைத்துப்