பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்113

வண்ணங்கள் பலபூசிப் பகலோன் வானில்
      வடிவழகு செய்கின்ற மாலை வேளை
எண்ணங்கள் சுழன்றாட நடந்து சென்றேன்;
      இசைகலந்த சொன்மாரி பொழியக் கேட்டேன்;
வண்ணமிலான் வடிவமிலான் இறைவன் என்பர்
      மங்கைக்குப் பங்களித்த கடவுள் மேனி
வண்ணத்திற் சரிபாதி கருப்பு, மற்றை
      வடிவமெனும் ஒருபாதி சிவப்பாம்’ என்றார்.
கருப்புநிறம் சிவப்புநிறம் கலந்த மேனிக்
      கடவுளவன் தென்னாட்டுக் குரியன் என்றார்;
விருப்பமுடன் செவியேற்ற என்றன் சிந்தை
      விடுதலையில் அரசியலில் விரைந்த தங்கே;
கருப்புடனே சிவப்புநிறம் கலந்து வானில்
      காட்சிதரும் இருவண்ணக் கொடியே இங்கும்
பொறுப்புடனே தென்னாட்டுக் குரிய தாகும்
      புகுந்தவையே பிறவெல்லாம் எனநி னைந்தேன்.

எழுத்தாளர் மன்றம்
மதுரை
22.7.1962