பக்கம் எண் :

124கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

11
தீண்டாமை

(கலிவெண்பா)

நெஞ்சத்தால் தூயனவன் நேர்மை பிழைத்தறியான்
வஞ்சத்தை ஓர்நாளும் வாழ்வதனிற் கண்டதில்லை;
ஆண்டான் திருவடிக்கே ஆளடிமை செய்துவந்தான்
ஆண்டவன் கோவிலுக் காகும் பொருளெல்லாம்
கொட்டிக் குவித்திருந்தான் கூலிஎன வேலைசெய்து
கொட்டிக் குவித்தான் குலமாண்ட வேதியற்கு;
தன்னலமே கண்டதில்லை; *தாண்டவமே கண்டதில்லை
முன்னமவன் கண்டதில்லை; முத்திதரும் தில்லைஎனக்
கண்டவர்கள் சொன்னதுண்டு கண்டுவரும் ஆர்வமிகக்
கொண்டெழுந்தான் அன்புளத்துத் தொண்டனவன் ஆதனூர்
வந்துதித்த நந்தனவன்; வந்தவனை அந்தணர்கள்
செந்தழழிற் போட்டுச் சிவபெருமான் பேர்சொல்லிச்
செம்மைப் படுத்திவிட்டார்; செம்மல் கருமேனி
வெம்மைச் சுடுதழலால் வேதித்தார் வேதியர்கள்;
உள்ளத்தாற் சொல்லால் உடலால் எனுமூன்றால்
எள்ளத் தனைபிறழா தென்றும் இருப்பானை
ஓங்கும் ஒழுக்கத் துயர்ந்தானை எவ்வெவர்க்கும்
தீங்கு நினையானைச் சேரிவாழ் நந்தனைப்
பொன்னம் பலத்துட் புகுந்து வழிபடத்தான்
முன்னம் தடுத்தார்கள் முப்புரியார்; முப்புரத்தைச்


* தாண்டவமே கண்டதில்லை - நடனமே கண்ட தில்லைப்பதி