14 நமது வாணிகம் கலிவெண்பா வங்கக் கடலகத்தே தங்கி உருவாகிப் பொங்கும் புயலொன்று புக்குவர லாமென்று வானொலியில் ஓர்செய்தி வந்தவுடன் வேகமுடன் ஆன பொருளெல்லாம் அப்பாலே போய்ப்பதுங்கும் எங்கே பதுக்குகிறார்? எப்பால் பதுக்குகிறார்? எங்கே எவரறிவார்? இங்கே விலையேறும்; உண்ணும் பொருளெனினும் உள்ளம் நடுங்காது மண்ணும் பிறபொருளும் மாற்றறிய மாட்டாமல் பண்ணுந் திறமெல்லாம் பாரறியும்; மேல்நாட்டு மண்ணில் நமதுபுகழ் மண்மூடச் செய்துவிட்டார்; உண்ணும் பொருளெனினும் ஓர்நாட்டுக் கேற்றுமதி பண்ணும் பொருளெனினும் பாங்குற நாம்கலக்கும் விந்தையினைக் கண்டு வெளிநாட்டார் தூற்றுகிறார் நிந்தையிது வென்னும் நினைப்பில்லை வாணிகர்க்கு; வாணிகத்திற் போற்றி வளர்த்துவரும் வெங்கொடுமை தோணிகட்டி ஏற்றத் தொலையாது; மேலும் கடத்தல் மறைத்தல் கலத்தல் பதுக்கல் முடக்கல் தொழிலைந்தும் முற்றத் தெரிந்துள்ளார்; ஐந்தொழிலும் வல்லான் அரனென் றுரைத்திடுவர் |